Friday, February 1, 2013

எனது முதல் வலைப்பதிவு

பல வருடங்களாக எதாவது ஒரு வலைப்பதிவில் பதிய வேண்டும் என்று ஆசை. ஆனால் என்ன எழுதுவது எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பம். சரி எதையாவது எழுதியே தீருவது என்று இன்று ஆரம்பித்து விட்டேன். இதோ எனது முதல் பதிவு ,

நம்முடைய  தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தை பற்றி எழுதுகிறேன். ஒரு காலத்தில் மற்ற மாநில போக்குவரத்துக் கழகங்கள் எல்லாம் எண்ணி வியக்கும் படி இருந்த நம் பேருந்துகளின் இன்றைய நிலை? மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. அதற்கு Oxygen கொடுப்பதற்காக நம் முதல்வர் பேருந்து கட்டனத்தை 10 வருடங்களுக்கு பிறகு உயர்த்தி உள்ளார். அது  எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது? பார்ப்போம்.



அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் சாதாரணக் கட்டணம், விரைவு, சொகுசு என பல வகைகள் உள்ளன. பெரும்பாலும் அனைத்து பேருந்துகளிலும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளுக்கான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் பேருந்துகளின் வேகமோ ஒரு டிவிஎஸ்-XL அளவு தான். உதாரணத்துக்கு 200 கிலோமீட்டர்  தூரமுள்ள சேலம் - பெங்களுருவை கடப்பதற்கு நமது சாதாரண பஸ்களுக்கு 5.30 மணி நேரம் ஆகிறது. சொகுசு விரைவு பேருந்துகளுக்கு 5 மணி நேரங்கள் ஆகிறது. அனால்   சொகுசு பேருந்துகளில் குறிப்பிடப்பட்டு இருக்கும் பயண நேரமோ 4.30 மணி நேரங்கள். அது கூடப் பரவாயில்லை, பெங்களுருவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் பேருந்துகளின் நிலையை நினைத்து பாருங்கள். 

பயணத்திற்கு இடையில் இரவு 2 மணிக்கு கூட ஒரு சாலை ஓர உணவகத்தில் உணவுக்கு(?) நிறுத்துவார்கள் பாருங்கள்! அந்த உணவக நுழைவாயிலில் வரும் வாசத்திலேயே(!) நம் உறக்கம் எல்லாம் போய்விடும். சரி உறக்கம் தான் இல்லை என்று ஆகி விட்டதே ஒரு காபி குடிப்போம் என்று குடித்தால் வாழ்கையில் அதன் பிறகு சரவண பவனில் கூட காபி குடிக்க பிடிக்காது. அவ்வளவு சுவை அந்த காபிக்கு. இவ்வளவு கேவலமான உணவகத்தில் ஏன் நிறுத்துகிறார்கள் என்று யோசித்தால் அது அரசின் உத்தரவாம். ஒரு பேருந்திற்கு அந்த உணவக முதலாளி 40 ரூபாய் அரசிற்கு செலுத்த வேண்டுமாம். அது மட்டும் இல்லாமல் ஓட்டுனர் மற்றும் நடத்துனற்கு இலவச உணவு  வேறு. 

இதற்கு எல்லாம் அந்த உணவக முதலாளியிடம் ஏது பணம் என்று ரொம்ப யோசிக்க வேண்டாம். ஒரு 12 ரூபாய் Brittania - Bourbon பிஸ்கட்டின் விலை 20 ரூபாய். பெயர் தெரியாத தண்ணீர் பாட்டிலின் விலை 20 ரூபாய். Pepsi கம்பெனியின் Aquafina-வின் விலையை விட 7/8 ரூபாய் விலை அதிகம். இதை பற்றி எல்லாம் யோசிக்க அரசுக்கு ஏது நேரம்? அனைத்து பேருந்துகளும் சரியாக அந்த உணவகத்துக்கு வந்து செல்கிறதா என்பதை சரி பார்க்க ஒரு செக்கிங் இன்ஸ்பெக்டர் வேறு அந்த உணவகத்தில் இருக்கிறார். பேருந்தின் நடத்துனரும் அந்த உணவக அச்சை(சீல்) தனது குறிப்பு சீட்டில் பெற்று செல்ல வேண்டுமாம் பேருந்து  வந்ததுக்கு சான்றாக. அந்த சீலை வைத்து அரசு 40 ரூபாயை பிறகு வாங்கி கொள்வார்களாம். என்னமா யோசிக்கிறாங்க?

அந்த உணவகத்தை விட்டு பேருந்து கிளம்ப ஆரம்பித்த பிறகு தூங்கலாம் என்று எண்ணினால் அதுவரை எங்கே இருந்தது என்றே தெரியாமல் இருந்த மூட்டை பூச்சிகள் கடி இறங்கும் வரை உங்களை தூங்க விடாது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கடந்த ஆண்டுகளை விட பேருந்துகளின் தரம் இப்போது பரவாயில்லை. 1990களில் திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் மூலம் ஈரோட்டில் இருந்து சென்னைக்கு A/C Sleeper பேருந்துகள் இயக்கிய நம் அரசுப் போக்குவரத்து கழகங்களின் இன்றைய நிலை உண்மையிலேயே வருந்தும் நிலையில் தான் உள்ளது.மீண்டும் பழைய TTC கால நிலைக்கு நம் பேருந்துகள் எப்போது திரும்பும் என்று உங்களோடு நானும் ஆவலோடு காத்திருக்கிறேன். நிச்சயமாக அந்த நிலை வெகு அருகில் இல்லை நம் அரசியல் வியா(வா)திகளால்.

                                                                                                            - பஸ் இன்னும் ஓடும் 


 நன்றி: திரு.சகாதேவன் விஜயகுமார் ( For using your picture in my blog ).




2 comments:

  1. Saravana naanum pastYearsa,Salem to Bangalore travel panren highways hotel total waste,high cost low quality

    ReplyDelete